கற்பூரம் என்பது கற்பூர மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து பெறப்பட்ட இயற்கையான ரசாயன கலவை ஆகும்.மெழுகு கற்பூர பந்துகள் முதன்மையாக டெர்பென்ஸ்களால் (தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் கரிம கலவைகள்) உருவாக்கப்படுகின்றன, அந்த டெர்பென்ஸ்கள்தான் கற்பூரத்தின் வலுவான வாசனைக்கு காரணம் ஆகும்.இயற்கையில், இந்த டெர்பென்ஸ் என்பது தாவரங்களில் உள்ள இயற்கை பாதுகாப்பு முறையின் முக்கிய பகுதிகள் ஆகும்.டெர்பென்சை சாப்பிடும் போது நச்சு தன்மை கொண்டிருப்பதால், அதன் நறுமணம் தாவர உண்ணி மிருகங்கள் கற்பூரத் தாவரத்தை சாப்பிடாமல் பாதுகாக்கிறது.ஆனால் கற்பூரத்தினால் அடைய கூடிய பலன்கள் நிறைய உள்ளன.

அதன் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளால் கற்பூரம், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய மருத்துவ அமைப்புகளில் நன்கு அறியப்பட்டுள்ளது.இது சளி நெரிசல், வலி மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு நாட்டு மருத்துவ தீர்வு ஆகும். உண்மையில், சில ஆய்வுகள் கற்பூரம் எரிந்த காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன.

கற்பூரம் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பூர்வீகமான சொந்தக்காரராக இருந்தாலும், உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் கற்பூரம் பரவலாக பயிரிடப்படுகிறது.சுவாரஸ்யமாக, இது 'குளோபல் இன்வாசிவ் ஸ்பெசீஸ் டேட்டாபேஸ்' ல் ஒரு நச்சுத்தன்மையுள்ள தாவரம் என்ற பட்டியலிடப்பட்டுள்ளது.

60 அடி உயரம் வரை வளர கூடிய ஒரு பசுமையான மரம் கற்பூரம். கற்பூர மரங்கள் பூர்வீக காடுகளில் தலை எடுத்து, விரைவாக பரவ கூடியது. அந்த மரத்திற்கு ஒரு குடை போன்ற தோற்றத்தை கொடுக்கும் வகையில், அதன் கிளைகள் பரவ முற்படுகின்றன. கற்பூர மரம் நீள்வட்ட இலைகள் மற்றும் சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது.அதன் பழம் வட்ட வடிவமாகவும் மற்றும் பொதுவாக ஊதா நிறத்தில் இருந்து கருப்பு நிறம் வரையிலும் இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா?

கற்பூரம் ஒரு மரம் மட்டுமல்ல, அது ஒரு எண்ணெய் மற்றும் ஒரு இரசாயன கலவை ஆகும். ஒரு இரசாயன கலவையாக அதை லாவெண்டர், கற்பூர துளசி மற்றும் ரோஸ்மேரி போன்ற தாவரங்களின் அத்தியாவசிய எண்ணெய்களில் இருந்து பெறலாம்.

கற்பூர லாரல் (வளையம்) அல்லது கற்பூர மரம் பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

  • தாவரவியல் பெயர்: சின்னமோம் காம்போரா
  • குடும்பம்: லாரசீஸ்
  • பொதுவான பெயர்கள்: காம்போர் லாரல், கற்பூரம், கற்பூர மரம், கபூர்
  • பயன்படுத்தப்படும் பகுதிகள்: இலைகள், பட்டை
  • உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பளவு: கற்பூர வகைகள், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை, ஆனால் அவை தற்போது அமெரிக்காவிலும், குறிப்பாக புளோரிடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆற்றலியல்: குளுமையானது
  1. கற்பூரத்தின் ஆரோக்கிய நலன்கள் - Camphor health benefits in Tamil
  2. எப்படி கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது - How is camphor used in Tamil
  3. கற்பூரத்தின் மருந்து அளவு - Camphor dosage in Tamil
  4. கற்பூரத்தின் பக்க விளைவுகள் - Camphor side effects in Tamil

கற்பூரம், அரிப்புதீக்காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பல தோல் நிலைகளுக்கு ஒரு செல்லுபடியாகும் தீர்வு ஆகும். இது தோல் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு அதனால் வீக்கம் மற்றும் வலியை ஒழிப்பதில் நன்மை பயக்க கூடியது.கற்பூரத்தின் சில குணநலன்களை நாம் இப்போது ஆராயலாம்.

  • அரிப்பை குறைக்கிறது: கற்பூரம் காயத்தின் அடிப்படையிலான தோல் அரிப்பினை குறைப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.இது நாட்பட்ட நமைச்சலுக்கு காரணமான, அயனி சேனல் TRP1 இன் செயல்பாட்டை தடுக்கிறது.
  • தோலிற்கு வயதாவதை தடுக்கிறது: கொலாஜன் தொகுப்பினை அதிகரிக்கவும் மற்றும் மெல்லிய வரி மற்றும் சுருக்கங்களை குறைக்கவும் கற்பூரம் பரிந்துரைக்கப்படுகிறது.கற்பூரம் தோலிற்கு இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அது ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும் மற்றும் சிறந்த ஆக்ஸிஜன் சப்ளைக்கும் வழிவகுக்கிறது. இந்த செயல்களால் உங்கள் தோல் இளமை மற்றும் புத்துணர்ச்சி பெறுகிறது.
  • கீல்வாத அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது: பாரம்பரியமாக, கற்பூரம் கீல்வாதத்தினால் ஏற்படும் வீக்கத்தை நிவர்த்தி செய்ய பயன்படுகிறது.கற்பூரமானது கீல்வாதத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும் செயலில் சேர்மங்களைக் கொண்டிருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இருமல் மற்றும் தொண்டை நெரிசலை குறைகிறது: கற்பூரம் இருமலுக்கான சில முக்கியமான மேற்பூச்சு மருந்துகளில் முக்கிய கருப்பொருளாக உள்ளது. கற்பூரத்தை சுவாசிப்பது மூச்சு குழாய் பாதையை திறக்க உதவுவதாக நம்பப்படுகிறது.
  • பூஞ்சை எதிர்ப்பான்: ஆய்வக ஆய்வுகள் கற்பூரம் ஒரு சிறந்த பூஞ்சை எதிர்ப்பு கலவை என்று குறிப்பிடுகின்றன. கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு, 48 வாரங்களுக்குள் கால்-ஆணி பூஞ்சையை வெளியேற்றுவதில் பயனுள்ளதாக காணப்படுகிறது.
  • தலைப் பேனை நீக்குகிறதுஉயிருள்ள (விலங்கு சார்ந்த) ஆய்வுகள் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு தலை பேனை சுத்தம் செய்வதோடு மேலும் அது திரும்ப வராமல் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.
  • இயற்கை கொசு விரட்டி: கற்பூர அத்தியாவசிய எண்ணெய் மற்றும் கற்பூரம் இயற்கை கொசு விரட்டி பண்புகளை கொண்டிருப்பதாக ஆராய்ச்சி ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பி-மென்தனே போன்ற உயிரியளவு சேர்மங்கள் கற்பூரத்தில் இருப்பதே இந்த கொசு விரட்டி பண்புகளுக்கு காரணமாக உள்ளது.

அரிப்புக்கு கற்பூரம் - Camphor for itching in Tamil

நமைத்தல் என்பது உடலில் ஏற்படும் ஒரு அரிப்பு உணர்வினை குறிக்கும் ஒரு நிலை ஆகும். இதற்கு பொதுவாக சொரிந்து கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இதுவரை, இந்த நிலையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எந்தவொரு காரணமும் அல்லது செயல்பாடும் அறியப்படவில்லை. எனவே, இதற்கான தற்போதைய நடப்பு சிகிச்சையில் நோயெதிர்ப்பு சக்திகளாக செயல்படும் அல்லது நரம்பு மண்டலத்தை இலக்காகக் கொண்ட மேற்பூச்சு முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது.உடலில் உள்ள அயனி சேனலாக இருக்கும் TRPA1, நாள்பட்ட நமைச்சல் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அயனி தோல் அரிப்பினை ஏற்படுத்தும் மூளை சமிக்ஞையை தொடங்குகிறது.

ஒரு சமீபத்திய ஆய்வு கட்டுரை TRPA1 தடுப்பு கோட்பாட்டை ஒப்புக்கொள்கிறது. மென்தால் அல்லது கற்பூரத்தின் பயன்பாடு காயத்தின் அடிப்படையிலான நமைத்தல் ஏற்படுபோது குளிர்ச்சியான உணர்வை வழங்குகிறது என்று அதில் மேலும் கூறப்பட்டது.'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மட்டாலஜி' வெளியிட்ட ஒரு ஆய்வின் படி, கற்பூரம் TRPA1 இன் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் அரிப்புகளின் தீவிரத்தை குறைக்கிறது.

ஆனால் மனிதர்களிடத்தில் கற்பூரத்தின் நமைத்தல் எதிர்ப்பு விளைவுகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து அளவை நிரூபிக்க எந்த மருத்துவ ஆய்வுகளும் இல்லை.

(மேலும் வாசிக்கவும்: அரிப்புக்கான சிகிச்சை )

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

சருமத்திற்கு கற்பூரத்தின் நன்மைகள் - Camphor benefits for skin in Tamil

சரும ஒவ்வாமைகள் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு தோல் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாக கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த வயது எதிர்ப்பு கலவை என்று கருதப்படுகிறது.உண்மையில், கற்பூரம் சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் போன்ற, வயதான அறிகுறிகளுடன் போராடும் பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்கள் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

(மேலும் வாசிக்கவும்: ஒவ்வாமைக்கான சிகிச்சை)

கற்பூரம் சரும செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் கொலாஜன் அளவுகளை அதிகரிக்கிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. கொலாஜன் என்பது நம் உடலில் உள்ள சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் ஒரு புரதம் ஆகும். மேலும் கற்பூரத்தின் மேற்பூச்சு பயன்பாடு விலங்கு மாதிரிகளில் யு.வி கதிர்களினால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது என்று முன்மொழியப்பட்டது.

ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது, தோல் திசுக்களின் இரத்த ஓட்டத்தை கற்பூரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டியது. ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் அதிகரித்த விநியோகத்தின் காரணமாக போதுமான இரத்த ஓட்டம் ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் தோலுக்கு வழிவகுக்கிறது.

தற்போதைய ஆராய்ச்சிகளின் படி பார்த்தால், கற்பூரத்தின் பயன்பாடு ஒப்பனை துறையில் அதிகரிக்கும் என்று கூறலாம்.

கீல்வாதத்திற்கு கற்பூரம் - Camphor for arthritis in Tamil

கீல்வாதம் என்பது முழங்கால், விரல்கள் அல்லது மணிகட்டை போன்ற மூட்டுகளை சுற்றிய இடங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறிக்கும் ஒரு நிலை ஆகும்.  ஒரு குறிப்பிட்ட மூட்டினை அதிகப்படியாக பயன்படுத்தும் காரணத்தால் விளையாட்டு வீரர்களுக்கு (மூட்டுகளில் கீல்வாதம்) ஏற்படுவது போல அல்லது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு சீர்குலைவு ஏற்படுவதன் காரணமாக, (முடக்கு வாதம்) இது ஏற்படலாம். பிந்தைய காலத்தில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பே அதன் சொந்த எலும்பு திசுக்களை அழிக்கிறது. பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மருத்துவத்தில், நீண்ட காலமாகவே, கீல்வாதம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பலவிதமான அழற்சி நோய்களுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் பயன்படுத்தப்பட்டது.

சைட்டோகீனீஸ் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற அழற்சி முகவர்களின் செயல்பாட்டில் கற்பூரம் தலையிடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விலங்கு அடிப்படையிலான ஆய்வுகள், கற்பூரம், மென்தால் மற்றும் தைமோல் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உருவாக்கத்தின் 250-500 மி.கி / கி.கி என்ற மருந்தளவில், குறிபிடத்தக்க அலற்சி எதிற்பு திறன் இருப்பதாக காட்டுகிறது.

இந்த ஆதாரம் கீழ்வாத வீக்கத்தில் கற்பூரத்தின் பாரம்பரிய பயன்பாட்டிற்கு சில நுண்ணறிவுகளை வழங்குகிறது.

கற்பூரம் வீக்கத்தை குறைப்பதைத் தவிர, கீல்வாத நோயாளிகளுக்கு வலுவான வலி நிவாரணி (அனால்ஜிசிக்) என்றும் அறியப்படுகிறது.63 நோயாளிகளில் ஒரு சீரற்ற மருத்துவ விசாரணையின் படி, ஒரு முக்கிய மூலப்பொருளாக கற்பூரத்தை கொண்ட ஒரு கிரீம் மேற்பூச்சின் பயன்பாடு குறிப்பிடத்தக்க வலி-நிவாரண விளைவைக் கொண்டிருக்கிறது.

கற்பூரம் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது - Camphor relieves pain in Tamil

கற்பூரம் என்பது பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட ஒரு வலி நிவாரணி (அனால்ஜிசிக்) ஆகும். இது பல்வேறு வலி நிவாரணி கிரீம்கள் மற்றும் லோஷன்களின் முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.உடலில் உள்ள சிக்னலிங் பாதைகள் குறுக்கிடுவதன் மூலம் கற்பூரம் வலி நிவாரணியாக செயல்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. இந்த பாதைகள் வலி உட்பட பல உணர்ச்சிக் கருத்துக்களுக்கு பொறுப்பு என்று அறியப்படுகிறது, இது கற்பூரத்தின் வலி நிவாரண நடவடிக்கைகளை விளக்குகிறது.

சமீபத்திய ஆய்வுகள் கற்பூரத்தை அதன் பொருட்களில் ஒன்றாக கொண்ட ஒரு தயாரிப்பு/ தெளிப்பான், மிகவும் அறியப்பட்ட உடலியல் நிலைமைகளுடன் தொடர்புடைய வலியை ஒழிப்பதற்கான மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.

இருமல் மற்றும் தொண்டை நெரிசல் ஆகியவற்றிற்கான கற்பூரம் - Camphor for cough and congestion in Tamil

நாசி மற்றும் மார்பு நெரிசல் என்பது இருமல் மற்றும் சளி ஆகியவற்றுடன் தொடர்புடைய பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். தற்போதைய சிகிச்சை முறையில் இருமல் அடக்கி மருந்துகள் அல்லது நெரிசல் எதிர்ப்பு (நெரிசலை அகற்றுவது) மருந்துகள் அடங்கும். ஒரு இரசாயன கலவையாக கற்பூரம் பல இருமல் மற்றும் நெரிசலுக்கு  நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படும் மேற்பூச்சு மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கிய கூறுகளில் ஒன்று ஆகும்.இந்த மருந்துகள் குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு நேர இருமல் மற்றும் நெரிசல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. மற்றொரு ஆய்வில், கற்பூரத்தை சுவாசிக்கும் பொழுது மூக்கடைப்பு நீங்கி மூக்கு வழியாக மூச்சு விடுவதை அதிகரிக்க முடியும் என்று பரிந்துரைக்கின்றது.

எனினும், ஒரு மார்பு நெரிசல் நீக்கியாக கற்பூரத்தின் சுயாதீன நன்மையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை.

(மேலும் வாசிக்கவும்: நாசி நெரிசல் ஏற்பட காரணங்கள்)

பூஞ்சை நோய்த்தொற்றுக்காக கற்பூரம் - Camphor for fungal infection in Tamil

தோல், ஆணி, மற்றும் முடி தொற்று போன்றவை பூஞ்சை நோய்த்தாக்கங்களில் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று. பூஞ்சை வெப்ப மண்டலங்களின் சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களில் எளிதில் வளர்கிறது, மேலும் அவற்றில் இருந்து விடுதலை பெறுவது மிகவும் கடினமாக ஒன்று. பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பல வீட்டு வைத்தியங்களில், கற்பூரம் முதல் வரிசையில் உள்ளது.பல்வேறு வகை பூஞ்சைகளை அழிக்க கற்பூரத்தின் செயல்திறனை சோதிக்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கூட சோதனை முறையில் (விற்றோ வில்) ஆய்வுகள் கற்பூரம் ஃபுஷரியம், பைட்டோபதோரா மற்றும் ஆஸ்பெர்ஜிலஸ் நைகர் போன்ற பல மண்ணால் உண்டாகும் பூஞ்சைகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என்று கூறுகின்றன. இதை தோல் பூஞ்சை நோய்த்தாக்கங்களில் இதேபோன்ற பூஞ்சாண விளைவுக்கு தொடர்புபடுத்தலாம்.

'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஃபேமிலி மெடிசின்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு படி, கற்பூரத்தின் அடிப்படையிலான கிரீம் மேற்பூச்சுப் பயன்பாடு 48 வார காலத்திற்குள் திறனுடன் கால் விரல் நக பூஞ்சையை நீக்கிவிடும்.

இருப்பினும், மனிதற்கு ஏற்படும் பூஞ்சண நோய்களின் குறிப்பிட்ட சிகிச்சையில் கற்பூரத்தின் செயல்திறனை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

(மேலும் வாசிக்கவும்: பூஞ்சை நோய்த்தொற்றுக்கான சிகிச்சை)

தீக்காயங்களுக்கு கற்பூரம் - Camphor for burns in Tamil

உயிருள்ள (விலங்கு அடிப்படையிலான) ஆய்வுகள் கற்பூரம் எள் எண்ணெய், மற்றும் தேன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு, இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது என பரிந்துரைக்கிறது. இந்த சூத்திரத்தின் பயன்பாடானது வேகமான சிகிச்சைமுறைக்கு வழிவகுக்கும் என்று மட்டுமல்லாமல், எரிந்த சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்தியாவில் மேலோட்டமான தீ காயங்களைக் கொண்ட 2000 பேரில் ஒரு தொடர் ஆய்வு (பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது) நடந்து வந்தது. ஆய்வின் முடிவில், தேங்காய் எண்ணையுடன் கலந்து கற்பூரத்தைப் பயன்படுத்துவது காயங்களைக் குணப்படுத்துவதில் மற்றும் எரிந்த காயங்களால் ஏற்படும் வலியை குறைப்பதில் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டது என தெரிவிக்கபட்டது.

முடி உதிர்தலுக்கு கற்பூரம் - Camphor for hair in Tamil

கற்பூரத்தால் முடிக்கு பல நன்மைகள் இருக்கலாம். இது ஒரு சக்தி வாய்ந்த பூஞ்சை காளான் எதிர்பான், அழற்சி எதிர்பான் மற்றும் ஆக்ஸிஜனேற்றி ஆகும். பூஞ்சை தொற்று போன்ற நிலைமைகளை கையாள்வதில் மட்டும் இந்த குணங்கள் உதவுவது மட்டும் இல்லை, மேலுல் முடி வீழ்ச்சியின் வீதத்தை குறைப்பதிலும் சில நன்மைகள் உள்ளன. இது நமைச்சலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது.

இருப்பினும், கற்பூரத்தின் நீண்ட கால பயன்பாட்டினால் தோலில் எரிச்சல் ஏற்படலாம்.எனவே, அதன் முடி நலன்களுக்காக கற்பூரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

பேன்களுக்கு கற்பூரம் - Camphor for lice in Tamil

முடி பேன்கள் ஒரு சமூக மற்றும் உடல் ரீதியான பிரச்சனையாகும்.மருத்துவர்களின் படி, முடி பேன் துணிகள் அல்லது தொப்பிகள் மூலமாக எளிதில் பரவ கூடியது.பேனின் தோற்றம் வழக்கமாக தோலுக்கு எரிச்சலூட்டும் இது ஒரு நமைச்சலை ஏற்படுத்துகிறது.

பேன்களுக்கு தானாக எதிர்பு சக்தி விகாரங்கள் உருவாவதன் காரணமாக, தற்போது பயன்படுத்தும் இரசாயனங்களில் பெரும்பாலானவை தங்கள் திறனை இழக்கத் தொடங்கி இருக்கின்றன.எனவே, இயற்கையான மற்றும் கரிம பேன் கொல்லி முகவர்கள் மீது ஒரு வளர்ந்து வரும் போக்கு உள்ளது. ஆய்வுக்கூட சோதனை படி விற்றோ முறையில், கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை முடி உதிர்வதைத் தடுக்க பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்புக்கு உதவுகின்றன. மேலும் இந்த தயாரிப்பு பேங்களை மட்டும் கொல்லுவதோடு மட்டுமல்லாமல், அது மீண்டும் வராமலும் தடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மேலே குறிப்பிட்டபடி கற்பூரத்தால் தோல் எரிச்சல் ஏற்படலாம்.கூடுதலாக, கற்பூரத்தின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளின் சரியான செயல்முறைக்கு எந்த மருத்துவ ஆய்வுகளும் இல்லை.

எனவே, முடி பேன்களில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக கற்பூரத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு தோல் மருத்துவரிடம் சோதித்து கொள்வது சிறந்தது.

(மேலும் வாசிக்கவும்தலை பேனுக்கான சிகிச்சை)

கொசு விரட்டியாக கற்பூரம் - Camphor as mosquito repellent in Tamil

பூச்சிக்களின் தாக்கத்தினால் உருவாகும் நோய்கள் அனைத்தும் மரணத்தின் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். WHO வின் படி, மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் உலகில் குறைந்தபட்சம் 91 நாடுகளில் எண்டெமிக் காக (தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஏற்படுவது) இருக்கிறது. மேலும் டெங்கு நோய் பரவலாக கொசு கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாகும். தற்போதைய கொசுக்களில் கொசு விரட்டியின் எதிர்ப்பு தன்மை இந்த சூழ்நிலையை மோசமாக்குகிறது. எனவே, நவீன விஞ்ஞானம் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான பூச்சி விரட்டிகளை நோக்கி ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கற்பூரம் அது போன்ற ஒரு இயற்கை கலவை ஆகும்.பாரம்பரியமாக, கற்பூர பந்துகள் பொதுவான பூச்சிகள் மற்றும் ஊர்வனற்றை வராமல் தடுக்க அலமாரியில் வைக்கப்படுகின்றன. இது மூடிய சூழலில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.

சமீபத்திய ஆராய்ச்சி லாவண்டர் துளசி (பேசில்) மற்றும் வேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து கொசு விரட்டி கேக் செய்ய கற்பூரத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. மற்றொரு ஆய்வு, கற்பூர அத்தியாவசிய எண்ணெய் முழு கற்பூரத்தை விட சக்தி வாய்ந்த பூச்சி விரட்டி ஆகும் என்று கூறுகிறது.இது கற்பூர அத்தியாவசிய எண்ணெய்களில் இருக்கும் சில செயலில் சேர்மங்களின் சாறு, இதற்காக பயன்படுத்தப்படலாம் என பரிந்துரைக்கின்றது.

'சர்வதேச கொசுக்கள் ஆராய்ச்சி இதழில்' வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, கற்பூர எண்ணெய்கள் பி-மென்தேன் மற்றும் சாம்பினே என்றழைக்கப்படும் இரசாயன சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஏடியஸ் ஏஜிப்டி (டெங்கு மற்றும் சிக்கன்குனியா வை பரப்ப கூடியவை) போன்ற கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை.

எனவே, இந்த பொதுவான நோய் திசையிலிருந்து கற்பூரம் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று கருதலாம்.

ஆண்மைக்காக கற்பூரம் - Camphor for libido in Tamil

பாரம்பரிய நம்பிக்கையின் படி, ஆண்மை அல்லது பாலியல் ஆசைகளை மேம்படுத்த கற்பூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அறிவியல் சான்றுகள் என வரும்போது, முடிவுகள் தெளிவாக இல்லை. இரண்டு வெவ்வேறு விற்றோ  ஆய்வுகள் கற்பூரத்தில் ஆண்மையை மேம்படுத்தும் சில நன்மைகள் உண்டு என தெரிவிக்கின்றன. ஆனால் 'சர்வதேச மூலப்பொருள் மற்றும் செல்லுலார் மருந்தியல்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது கற்பூரம் ஆண்மை அல்லது பாலியல் ஹார்மோன்களில் குறிப்பிடத்தக்க எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என்று கூறுகிறது.

(மேலும் வாசிக்கவும்: ஆண்மையை அதிகரிப்பது எப்படி)

  • மனித நுகர்வுக்காக கற்பூரம் விஷமுள்ளதாக கருதப்படுகிறது என்றாலும், கற்பூர தூள் துருவல் (கதா) ஆயுர்வேதத்தில்  இருமல் மற்றும் அதிக கொழுப்புச்சத்து போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சைஅளிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • இது பொதுவாக தொண்டை நெரிசல், சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு நிவாரணம் பெற பயன்படுத்தும் பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்கள் தயாரிக்க பயன்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.
  • கற்பூர எண்ணெய் மற்றும் கற்பூரம் ஆகியவை தேங்காய் எண்ணையுடன் கலந்து பல்வேறு தோல் மற்றும் உச்சந்தலை நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
  • கற்பூரத்தின் அத்தியாவசிய எண்ணெய் அதன் ஒரு தூண்டுதல் மற்றும் ஒரு ஆண்டிசெப்டிக் வடிவத்தில் காணப்படுகிறது.
  • கற்பூர மாத்திரைகள் பரவலாக பொதுவான பூச்சிகள் மற்றும் கொசுக்கள் ஆகியவற்றை தடுக்கும் ஒரு பூச்சி கொல்லியாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
  • மனித நுகர்வுக்கு அதன் நச்சுத்தன்மையை காரணமாக, கற்பூரத்தை பொதுவாக சாப்பிடக்கூடாது. எனினும், நீங்கள் ஆயுர்வேதத்தில் இருந்தால் அல்லது கற்பூரத்தை வாய் வழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆயுர்வேத டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
  • பாவ்ரகாஷ் நாகன்டு வின் படி, (ஒரு பண்டைய ஆயுர்வேத உரை), 125-375 மி.கி. கற்பூரம் நாள் முழுவதும் சிறு அளவுகளாக பிரிக்கப்பட்டு சாப்பிடப்படலாம்.
  • எஃப்.டி.ஏ வழிகாட்டு நெறிப்படி, 3 முதல் 10 சதவிகிதம் கற்பூரத்தின் சாந்து தயாரிப்பை வலி நிவாரணத்திற்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW
  • பாலூட்டும் தாய்மார்களில் பால் உற்பத்தியை கற்பூரம் குறைக்கிறது, மேலும் அது கருக்கலைப்பான் (கருக்கலைப்பை தூண்டுகிறது) என்று கண்டறியப்பட்டுள்ளது.எனவே, நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராகவோ இருந்தால், கற்பூரத்தை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
  • கற்பூரம் ஒரு கருவுறுதல் தூண்டியாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஆய்வுகள் இது விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் ஆகியவற்றின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றன. கற்பூரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பரிந்துரை பெருவது அவசியம்.
  • சாப்பிடப்படும் போது கற்பூரம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.2 கிராமிற்கும் குறைவான ஒரு கற்பூரத்தின் அளவு மனிதர்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். நச்சுத்தன்மை ஆரம்ப அறிகுறிகளில் இவை அடங்கும்: குமட்டல்தலைவலி, வாந்தி, வயிறு சுடுவது. பொதுவாக, இந்த அறிகுறிகள் கற்பூரத்தை சாப்பிட்ட முதல் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் காண்பிக்கப்படுகின்றன. சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால், அதனால் வலிப்பு, கோமா மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஏற்படலாம். அதிர்ஷ்டவசமாக, கற்பூரத்தின் நச்சுத்தன்மைக்கு முதல் 24 மணி நேரத்திற்குள் திறம்பட சிகிச்சையளிக்க முடியும்.எனவே, இது போன்ற எந்த அறிகுறிகளாவது ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை சந்திக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.
  • குழந்தைகளுக்குப் "பாதுகாப்பற்றது" என பட்டியலிடப்பட்டிருப்பதால், கற்பூரம் ஒருபோதும் குழந்தைகளால் பயன்படுத்தப்படக்கூடாது.
  • நீண்ட கால கற்பூரத்தின் நச்சுத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

Medicines / Products that contain Camphor

மேற்கோள்கள்

  1. Abdul Rashid War et al. Mechanisms of plant defense against insect herbivores. Plant Signal Behav. 2012 Oct 1; 7(10): 1306–1320. PMID: 22895106
  2. Sarina B. Elmariah, Ethan A. Lerner. Topical Therapies for Pruritus. Semin Cutan Med Surg. 2011 Jun; 30(2): 118–126. PMID: 21767774
  3. Ansari MA, Razdan RK. Relative efficacy of various oils in repelling mosquitoes. Indian J Malariol. 1995 Sep;32(3):104-11. PMID: 8936292
  4. Tran TA et al. Camphor Induces Proliferative and Anti-senescence Activities in Human Primary Dermal Fibroblasts and Inhibits UV-Induced Wrinkle Formation in Mouse Skin. Phytother Res. 2015 Dec;29(12):1917-25. PMID: 26458283
  5. Xu H1, Blair NT, Clapham DE. Camphor activates and strongly desensitizes the transient receptor potential vanilloid subtype 1 channel in a vanilloid-independent mechanism. J Neurosci. 2005 Sep 28;25(39):8924-37. PMID: 16192383
  6. Yosuke Kaneko, Arpad Szallasi. Transient receptor potential (TRP) channels: a clinical perspective. Br J Pharmacol. 2014 May; 171(10): 2474–2507. PMID: 24102319
  7. Nawaz A et al. Clinical efficacy of polyherbal formulation Eezpain spray for muscular pain relief. Pak J Pharm Sci. 2015 Jan;28(1):43-7. PMID: 25553684
  8. Cohen M, Wolfe R, Mai T, Lewis D. A randomized, double blind, placebo controlled trial of a topical cream containing glucosamine sulfate, chondroitin sulfate, and camphor for osteoarthritis of the knee. J Rheumatol. 2003 Mar;30(3):523-8. PMID: 12610812
  9. Ian M. Paul et al. Vapor Rub, Petrolatum, and No Treatment for Children With Nocturnal Cough and Cold Symptoms. Pediatrics. 2010 Dec; 126(6): 1092–1099. PMID: 21059712
  10. Subajini Mahilrajan et al. Screening the antifungal activity of essential oils against decay fungi from palmyrah leaf handicrafts. Biol Res. 2014; 47(1): 35. PMID: 25287894
  11. Toxicology Data Network. CAMPHOR. National Institutes of Health, Health & Human Services, U.S. National Library of Medicine
  12. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Executive summary.
  13. Ansari MA, Razdan RK. Relative efficacy of various oils in repelling mosquitoes. Indian J Malariol. 1995 Sep;32(3):104-11. PMID: 8936292
  14. Sima Shahabi et al. Central Effects of Camphor on GnRH and Sexual Hormones in Male Rat. Int J Mol Cell Med. 2012 Autumn; 1(4): 191–196. PMID: 24551777
Read on app