குழாய்க் கசிவு - Extravasation in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

January 03, 2019

March 06, 2020

குழாய்க் கசிவு
குழாய்க் கசிவு

குழாய் கசிவு என்றால் என்ன?

நரம்புகள் வழியாகச் செலுத்தப்படுகிற மருந்துகள் சில சமயம் கவனக்குறைவின் காரணமாக, இரத்த நாளங்களைத்தாண்டி கசிய ஆரம்பித்து, அதன் சுற்றுப்புறத்தில் உள்ள திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனை குழாய்க்கசிவு என்று கூறுவர்.சில நோய்த்தடுப்பு மருந்துகளை (கொப்புளங்கள் அல்லது திசுக்களில் காயம் ஏற்படுத்தும் மருந்துகள்) செலுத்தும் போது ஏற்படும் கசிவு இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தி, கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.இதனால் குறிப்பிட்டமுதன்மையான நோய் தாக்குதலுக்கான சிகிச்சை அளிப்பதில் தாமதமாகிறது.இதனால் திசுக்களுக்கு நேரும் சேதமானது, மருந்துகளின் செறிவு மற்றும் கசிந்த மருந்துகளின் அளவுக்கு நேரடியான விகிதத்தில் இருக்கும்.

இதனுடன் தொடர்புடைய முக்கிய அறிகுறிகள் என்ன?

குழாய்க் கசிவு தொடர்பான அறிகுறிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

ஆரம்ப நிலை அறிகுறிகள்

  • வீக்கம்.
  • தோல் தடிப்பு நோய்.
  • வலி.
  • கொப்புளங்கள்.
  • பிற்கால அறிகுறிகள்
  • தோல் அரிப்பு.
  • பாதிக்கப்பட்ட திசுக்களில் புண் / இரணம் தோன்றுதல்.
  • நீண்ட கால வலி.  
  • பாதிக்கப்பட்ட பகுதியில் செயல்பாடு இழப்பு.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

பின்வரும் காரணங்களால் குழாய்க் கசிவு ஏற்படலாம்:

  • கவனக்குறைவின் காரணமாக நரம்புகள் வழியாகச் செலுத்தப்படுகிற மருந்துகள் மூலம்.
  • தோல் அல்லது இரத்த நாளத்தில் பலவீனம்.
  • உடல்பருமன்.
  • தொடர்ந்து நரம்பு ஊசி போடுதல்.
  • நரம்பு ஊசிகளால் கடந்த காலத்தில் ஏற்றப்பட்ட காயம்.
  • தோலுக்கு அடியில் இருக்கிற தசை நார்களில் நரம்பு ஊசிகளால் ஏற்றப்பட்ட காயங்கள்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஒரு தனிநபர் தெரிவிக்கின்ற இதன் தொடர்புடைய அறிகுறிகளின் அடிப்படையில் குழாய்க் கசிவு சந்தேகிக்கப்படுகிறது.குழாய்க் கசிவு பற்றிய அடையாளம் மற்றும் அறிகுறிகளை ஒவ்வொரு தனிநபரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒரு தனி நபர் அவர்கள் உணரும் அறிகுறிகளை தொடர்ந்து மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.மருத்துவர் அல்லது செவிலியர் குழாய்க் கசிவின் நோயறிதலை கண்டறிய கிழ்க்கண்ட சோதனைகளை செய்யலாம்:

  • நரம்பு மண்டல வடிகுழாயிலிருந்து இரத்தம் திரும்ப இயலா நிலை.
  • நரம்பு மண்டல வடிகுழாயின் மூலம் மருந்து செலுத்தும் போது தடை ஏற்படுதல்.
  • நரம்புகளில் செலுத்தப்படும் திரவத்தின் ஓட்டம் தடைபடுதல்.

சிகிச்சை பின்வரும்  நிலைகளை உள்ளடக்கியது:

  • நரம்பு ஊசி உட்செலுத்துதலை உடனடியாக நிறுத்துதல்
  • எஞ்சியுள்ள மருந்துகளின் தாக்கம் (வெளியேறுதல்).
  • இரத்த நாளங்கள் சார்ந்த சிரைனுடைய கருவியை அகற்றுதல்.
  • பாதிக்கப்பட்ட மூட்டு பகுதியின் மேடாக வைத்தல்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளிகளை குளிர்ச்சியாக வைத்தல்.
  • கார்டிகோஸ்டீராய்டுகளின் மேற்பூச்சு பயன்பாடு.
  • டைமெயில் சல்பாக்ஸைட்டின் பரவலான பயன்பாடு.

குழாய்க் கசிவை கவனமாக இருப்பதாலும், முறையான மற்றும் திறமையான நிர்வகிப்பு மூலமும் வராமல் தடுக்க முடியும்.



மேற்கோள்கள்

  1. The Royal children's Hospital Melbourne [internet]: Victoria State Government. Extravasation Injury Management
  2. Great Ormond Street Hospital for Children. Extravasation and infiltration. NHS Foundation Trust. [internet].
  3. European Oncology Nursing Society. Causes, Diagnosis, and Treatment of Extravasation . European Specialist Nurses Organisation. Causes, Diagnosis, and Treatment of Extravasation .
  4. Oxford University Press. Management of chemotherapy extravasation: ESMO–EONS Clinical Practice Guidelines. University of Oxford. [internet].
  5. Journal of the American Academy of Physician Assistants. How should extravasation injuries be treated?. American Academy of Physician Assistants. [internet].

குழாய்க் கசிவு க்கான மருந்துகள்

Medicines listed below are available for குழாய்க் கசிவு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.