சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா என்பது ஒரு இலையுதிர் புதர் ஆகும், இது இந்தியாவின் பல பகுதிகளிலும் காடாக வளர்ந்து உள்ளது. இந்த மூலிகை பல வகை சிகிச்சைகள் மற்றும் பலன் அளிக்கும் காரணத்தினால் ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருந்தியல் அமைப்பு இதை மிக உயர்ந்த நிலையில் கருதிகிறது. உடலின் மொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதனால், ஆயுர்வேதத்தில் இதனை "ரசயன" என்று அழைக்கப்படுகிறது. சீந்தில் கொடி யை சமஸ்கிரதத்தில் “அம்ரிதா” என்று அழைப்பார்கள்; அதன் பொருள் “மரணத்தை வெல்லும் அமுதம்” என்றாகும். இந்த அற்புதமான விளைவுகளை எல்லாம் பார்த்தால், பூரானத்தில் ‘தேவர்கள்’ கடைந்து எடுத்த- என்றும் இளமை மாறா ஆரோக்யத்தை தரும் “அம்ருதம்” இந்த சீந்தில் கொடி தானோ என்று கூட தோன்றுகிறது. 

சீந்தில் கொடி செடி பொதுவாக வலுவற்ற சதைப்பற்றுள்ள தண்டுகளுடன் இருக்கும் ஒரு படர் கோடி ஆகும். இதன் தண்டு 1-5 cm அகலம் கொண்டு, வெள்ளை நிறத்திலிருந்து சாம்பல் நிறம் வரை தோன்றும். சீந்தில் கொடியின் இலைகள் இதய வடிவில் மென்மையானதாக(மெல்லிய) இருக்கும். கோடை மாதங்களில் இதில் பச்சை-மஞ்சள் கலந்த  நிறத்தில் மலர்களைக் பூக்கும், குளிர்காலத்தில் சீந்தில் கொடி செடியில் பழங்கள் காய்க்கும். சீந்தில் கொடி பழம் பச்சை நிற உள்ளொட்டுத் தசைக் கொண்ட கனியாக இருக்கும், இது பழுதப் பின் சிவப்பாக மாறும். சீந்தில் கொடியின் மருத்துவ தன்மை அதன் தண்டுகளில் காணப்பட்டாலும், இலை, பழம், வேர் ஆகியவை சிறிய அளவில் பயன்படுகின்றன.

சீந்தில் கொடி பற்றி சில அடிப்படை உண்மைகள்

  • தாவரவியல் பெயர் டினோஸ்போரா கார்டிபோலியா
  • குடும்ப பெயர் : மெனிஸ்பெர்மேசி
  • பொது பெயர்கிலோய், குடுச்சி, குல்பெல், ஹார்ட்-லெவிட் மூன்சீட், டினோஸ்போரா
  • சமஸ்கிருதம் பெயர்அம்ரிதா, தந்த்ரிக்கா, குண்டலினி, சக்ரக்ஷினி
  • பயன்படும் பகுதிகள்: தண்டு, இலைகள்
  • பிராந்திய மற்றும் புவியியல் பரவல்: சீந்தில் கொடியின் பூர்வீகம் இந்திய என்றாலும் இது சீனாவிலும் காணபடுகிறது
  • ஆற்றல்: வெப்பம்
  1. உடல்நலத்திற்கு சீந்தில் கொடி அளிக்கும் பயன்கள் - Giloy benefits for health in Tamil
  2. சீந்தில் கொடி இப்படி பயன்படுத்த படுகிறது - How giloy is used in Tamil
  3. அம்ருதவல்லியின் மருந்தளவு - Giloy dosage in Tamil
  4. அம்ருதவல்லியின் பக்க விளைவுகள் - Giloy side effects in Tamil
சீந்தில் கொடி , நன்மைகள், பயன்கள்,பக்க விளைவிகள் மற்றும் மருந்தளவு டாக்டர்கள்

ஆயுர்வேத மருந்துகளில் சீந்தில் கொடி ஒரு பிரபலமான மருந்தாகும். இதன் தண்டு ஒரு நல்ல குணபடுத்தும் பொருளாக மட்டும் அல்லாமல் ‘ரசாயனமாகவும்’ பயனளிக்கிறது, அது நம் உடல் உறுப்புக்களை சீராகவும் நேர்த்தியாகவும் செயல் பட உதவுகிறது. இந்த ஆயுர்வேத அமுதம் அளிக்கும் சில உடல் நலன்களை பற்றி நாம் ஆராய்வோம்

  • எடை இழப்பிற்க்கு சீந்தில் கொடி: சீந்தில் கொடி மூலிகை கொழுப்பை கரைக்கும் ஆற்றல் படைத்தது, அதனால் இதை தொடர்ந்து பயன் படுத்திவந்தால் இது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி கல்லீரலை பாதுகாக்கிறது.
  • காய்ச்சலுக்கு சீந்தில் கொடி: சீந்தில் கொடி மூலிகை நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் கொண்டது. இது  டெங்கு காய்ச்சலைப் போன்ற பொதுவான நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
  • நீரிழுவு நோய்க்கு சீந்தில் கொடி: சீந்தில் கொடி மூலிகை இரத்திதில் உள்ள க்ளுகோஸ் அளவை குறைத்து, இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து நீரிழுவு நோய்க்கு மருந்தாகிறது
  • சுவாச தொற்றிர்க்கு சீந்தில் கொடி : சீந்தில் கொடி மூலிகை நாள்பட்ட இருமல், ஒவ்வாமை நாசியழற்சி
  • போன்ற நோய்களின் சிகிச்சையில் சிறப்பாக செயல்படுகிறது. இது ஆஸ்துமாவின் அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
  • பெண்களுக்கு சீந்தில் கொடி: நோயெதிர்ப்பை மேம்படுதுவத்னால் சீந்தில் கொடி மாதவிடாய் நிற்றல் தருவாயில் இருக்கும்  பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் அண்டிஅக்சிடென்ட்  பண்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு சட்டு குறைப்பாடு) அபாயத்தை குறைக்க உதவும்.
  • ஆண்களுக்கு சீந்தில் கொடி: ஆண்கள் சீந்தில் கொடி மூலிகை பயன்படுத்துவதன் மூலம் பாலியல் செயல்திறன் மற்றும் விந்துவெளியேற்றளின் தரத்தை அதிகரிக்க முடியும்.
  • புற்றுநோய்க்கு சீந்தில் கொடி: சில ஆய்வுகளின் படி இதன் அண்டிஆக்சிடன்ட் தன்மையினால் சீந்தில் கொடியின் பயன்பாடு புற்றுநோயின் சிகிச்சையில் உதவும் .
  • மன ஆரோக்யத்திற்கு சீந்தில் கொடி: பொதுவாக சீந்தில் கொடி பதற்றம், மன சோர்வு மற்றும் சில மனநோய்களுக்கு பயன்படுத்தபடுகிறது 

ஆஸ்துமாவுக்கு சீந்தில் கொடி - Giloy for asthma in Tamil

ஆயுர்வேதத்தில், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி  பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் செய்த ஆய்வுகளில் படி, அம்ருதவல்லியின் சாறு, நுண்ணுணர்வு மற்றும் ஒவ்வாமை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாகும். பர்மகோக்நோசி விமர்சனங்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கட்டுரையில் டினோஸ்போரா  அல்லது சீந்தில் கொடி, ஆஸ்துமா எதிர்ப்பு திறன் உள்ள மூலிகை என குறிப்பிட பட்டுள்ளது. இருப்பினும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதர்க்கு அம்ரிதவல்லியின் விளைவுகளை சோதிக்க மனித ஆய்வுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, நீங்கள் உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் தொடர்பு கொண்டு அம்ருதவல்லியில் உள்ள ஆஸ்துமா நோய் எதிர்க்கும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளுவும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

எடை இழப்பிற்க்கு அம்ருதவல்லி - Giloy for weight loss in Tamil

தன் வியக்கத்தக்க எடை இழப்பு தன்மைகளால் அம்ருதவல்லி ஆயுர்வேத மருந்துவத்தின் உலகை முற்றிலுமாக மற்றயுள்ளது. உங்களுக்கு பாரம்பரியமான அல்லது முழுமையான மருத்துவத்தில் ஆர்வம் இருந்தால், இதன் சில எடை இழப்பு நன்மைகள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருபீர்கள். இதுவரை அம்ருதவல்லியின் எடை இழப்பு நன்மைகள் பற்றி தீவிரமான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், இந்த மூலிகை கொழுப்பை கரைக்கும் தன்மை மற்றும் இரத்தச் சிவப்பணு அதிகரிக்கும் தன்மை  கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதனை எடுத்து கொண்டால் உடலில் உள்ள கேட்ட கொழுப்பை அகற்றுவதோடு நிறுத்தாமல் கலீரலையும் ஆரோக்யமாக வைக்க உதவுகிறது. ஆகவே உணவு எளிதில் ஜீரணமாகிறது. ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்து உங்களுக்கேற்ற ஒரு குறிப்பிட்ட அளவுகோலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. (மேலும் வாசிக்க: உடல் பருமன் சிகிச்சை).

அம்ருதவல்லியின் புற்றுநோய் எதிர்ப்பு தன்மைகள் - Giloy anticancer properties in Tamil

அம்ருதவல்லியிலுள்ள புற்றுநோய்  எதிர்ப்பு தன்மைகளை மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டிகள் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களில் ஆய்வு செய்யப்பட்டன. விவோ ஆய்வுகளின் படி அம்ருதவல்லியின் சாற்றில் புற்றுநோய் எதிர்க்கும் முகவர்கள் உள்ளது. மேலும் டினோஸ்போராவிலுள்ள பால்மடின் அல்கலோயிட் தன்மைகள் தான் இதன் புற்றுநோய் எதிர்க்கும் பண்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மனித மாதிரிகள் இல்லாததால் இந்த மூலிகையின் புற்றுநோய் எதிர்க்கும் திறன் பற்றி மேலும் அறிந்து கொள்ள உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேசுவது சிறந்தது.

மாதவிடாய் நிற்றல்லுக்கு சீந்தில் கொடி - Giloy for menopause in Tamil

மாதவிடாய் நிற்றல் தருவயில்லுள்ள பெண்களில் அது  இனப்பெருக்க உறுப்பின் இறுதி கட்டமாக மட்டுமில்லாமல், அத்துடன் சில அசாதாரணமான இயற்கை அறிகுறிகளையும் மாற்றங்களையும் கொண்டு வருகிறது. இது நோயெதிர்ப்பு அமைப்பையும் பாதிப்படைய செய்யும் என நம்பப்படுகிறது. ஆய்வுகளின் படி மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு நோய்த்தொற்றை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் மற்றும் அதை சார்ந்த அணுக்கள் குறைகின்றன, இவைகள்தான் ஒருவரை நோயதொற்றில் இருந்து மீட்கின்றன. இதன் விளைவாக, பெண்களுக்கு அதன் பிறகு வரும் வாழ்க்கை நிலைகளில் பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன  அதிர்ஷ்டவசமாக, மாதவிடாய் நிற்றல் தருவயில்லுள்ள பெண்களுக்கு சீந்தில் கொடி ஒரு சிறந்த நோயெதிர்ப்பு ஊக்கமருந்து என்று கூறப்படுகிறது. 200 மாதவிடாய் நின்ற பெண்களைக் கொண்ட ஒரு மருத்துவ ஆய்வில், 100 பெண்களுக்கு சீந்தில் கொடி சாறு வழங்கப்பட்டது, மற்ற 100 பெண்களுக்கு போலியான பயனற்ற மருந்து வழங்கப்பட்டது. ஆறு மாத காலங்களுக்கு பல்வேறு உடல் அளவுருக்கள் கண்காணித்து இந்த சிகிச்சையின் விளைவு ஆராயப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், சீந்தில் கொடி சாற்றை எடுத்துக்கொண்ட பெண்களுக்கு போலி மருந்து எடுத்துக்கொண்ட பெண்களை விட சிறந்த தடுப்பாற்றல் அதிகமாக இருந்தது எனவே, அம்ருதவல்லிக்கு கண்டிப்பாக மாதவிடாய் காரணம்மாக நோய் எதிர்ப்பு அமைப்பில் உண்டாகும் மாற்றங்களை தாமதப்படுத்தும் திறன் உண்டு .

பதற்றம் மற்றும் மனசோர்வுக்கு சீந்தில் கொடி - Giloy for anxiety and depression in Tamil

இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சீந்தில் கொடி மூலிகையில், மன நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பதற்றம் மற்றும் மனசோர்வை குறைபதர்க்கான பெரும் திறன் உள்ளது என்பதை கண்டறியப்பட்டுள்ளது. விவோ ஆய்வு சீந்தில் கொடி பதட்டத்தை குறைக்கும் சில மருந்துகளுக்கு ஈடான திறன் உள்ளதாக குறிப்பிடுகிறது. இருப்பினும் இதை மனிதர்களில் சோதிப்பது நிலுவையில் உள்ளது. ஆயுர்வேத மருத்துவர்களின் படி டினோஸ்போற என்ற சீந்தில் கொடி நினைவாற்றலை மேம்படுத்தும் மருந்துகளின் பதார்த்தங்களில் ஒரு முக்கிய மூலிகை ஆகும்  

கொழுப்பை குறைக்க சீந்தில் கொடி - Giloy for cholesterol in Tamil

ப்ரி-க்ளினிக்கல் ஆய்வுகளின் படி அம்ருதவல்லியின் தொடர்ச்சியான பயன்பாடு உடலின் ஆரோக்கியமான கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது. சீந்தில் கொடி எடுத்துகொல்வதனால் அடர்த்தி குறைவான கொழுப்புகள் (கெட்ட கொழுப்பு) மற்றும் இதர கொழுப்பு அமிலங்களின் அளவுகள் கணிசமாகக் குறைத்தது. இருப்பினும், மனித ஆய்வுகள் இல்லாத நிலையில், கொழுப்பை குறைப்பதற்க்காக அம்ருதவல்லியை ஏதேனும் வடிவத்தில் எடுத்துகொள்வதர்க்கு முன்பு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

வீர்யத்தை மேம்படுத்தும் அம்ருதவல்லி - Giloy boosts libido in Tamil

விவோ ஆய்வின் படி அம்ருதவல்லி ஒரு சிறப்பான பாலுணர்வூட்டி. விலங்குகளில் பாலியல் செயல்திறன், பாலியல் வீரியத்தில் மாற்றங்கள் மற்றும் விந்துவெளிப்படுதல் எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணபடுகிறது. எனினும், மனிதர்கள் மீதான பாலியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

வயிற்றுப் புண்ணிற்கு சீந்தில் கொடி - Giloy for ulcer in Tamil

ஆயுர்வேதத்தில், அம்ருதவல்லியை அஜீரணம், வாயுகோளாறு  மற்றும்ம் வயிறு வீக்கத்திற்க்கு மருந்தாக பயன் படுதிகின்றனர். ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் படி சீந்தில் கொடி சாற்றை எடுத்துக்கொள்வதனால் இரைப்பை புண் அறிகுறிகளைக் குறைகிறது, மற்றும் வயிற்றிலுள்ள ph சை அதிகரிக்க செய்து அமிலத்தன்மையை குறைகிறது. ஆனால், மனித ஆய்வுகள் எதுவும் இல்லாததனால், இந்த மூலிகையின் வயிற்று புண் எதிர்க்கும் தன்மையை உறுதிப்படுத்துவது கடினம். எந்தவொரு வடிவத்திலும் அம்ருதவல்லியை எடுத்துக்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் அணுகுவது எப்போதுமே நல்லது

அம்ருதவல்லியின் அண்டிஅக்சிடென்ட் தன்மைகள் - Giloy antioxidant properties in Tamil

ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் இதர உறுப்புக்களுக்கு (எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள்) எதிராக உடலின் முதன்மை பாதுகாப்பு வளையம் ஆகும். இந்த இதர உறுப்புகள் உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களின் காரணமாக உருவாகின்றன. ஆனால் வாழ்க்கைமுறை நிலைமை அல்லது மன அழுத்தம் உடலில் ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் இதர உறுப்புக்களுக்கு இடையே ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கும். இது அக்சிடேடிவ் அழுத்தம் என அழைக்கப்படும் ஒரு நிலைமையை உருவாக்குகிறது. ஒரு உடல் தொடர்ந்து அக்சிடேடிவ் அழுத்தத்தில் இருந்தால் அதன் இயல்பான செயல்கள் படிப்படியாக குறைந்து விடும். காலப்போக்கில், இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். அக்சிடேடிவ் அழுத்தத்தின் காரணமாக விரைவாக முதிர்ச்சி அடைவதன் அறிகுறிகளும் தோன்றலாம். ஆய்வுகள் சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா வில் சிறந்த அண்டி அக்சிடென்ட் தன்மைகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஆய்வுகள் அம்ருதவல்லியிலுள்ள பினோலிக் உறுப்புக்கள் இந்த அண்டி அக்சிடென்ட் தன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் படி, உடலில் அதிக அளவு அண்டி அக்சிடென்ட் இருந்தால் அது மாரடைப்பு  மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை மட்டுப்படுதுவதொடு, உடலின் ஒட்டு மொத்த செயல்திறனையும் அதிகரிக்க உதவுகிறது

ஒவ்வாமை நாசியழற்சிக்கு சீந்தில் கொடி - Giloy for allergic rhinitis in Tamil

மருத்துவ ஆய்வுகளின் படி சீந்தில் கொடி மூலிகை ஒரு சிறந்த ஒவ்வாமை எதிர்ப்பி ஆகும், குறிப்பாக ஒவ்வாமை நாசியழற்சிக்கு இது சிறந்த தீர்வாகும். இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 75 நபர்களுக்கு சீந்தில் கொடி அல்லது மறுத்து போல் போலி பொருள்  ஒன்று குடுக்கபட்டது. இதில் சீந்தில் கொடி குடுக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை நாசியழற்சி, கணிசமாக குறைந்தது காணபட்டது. மேலும் எசினோபில் மற்றும் ந்யுட்ரோபில் எணிக்கை (ஒரு விதமான வெள்ளை இரத்த அணுக்கள்) குறைந்தது காணப்பட்டது. அதனால் சீந்தில் கொடி முலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம்  

அண்டி பையோடிக்காக சீந்தில் கொடி - Giloy as an antibiotic in Tamil

ஆய்வுக்கூடத்தில் நடத்திய ஆய்வுகளின் படி சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா தண்டின் சாறு பல நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிரான அண்டி பாக்டீரியாவை எண்ணிகையை அதிகரிக்கும் செயல்பாட்டைக் காட்டுகின்றது. சூடோமோனாஸ் எஸ்பிபி இந்த மூலிகையினால் மிகவும் பாதிக்க படுகிறது, மேலும் போது க்லேப்செயல்லா மற்றும் புரோட்டீஸ் மிதமான பாதிப்பு காட்டியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரீகிளினிகல் ஆய்விகளின் படி எச்சோரிச்சியா கோலை ஏற்படுத்தும் பெரிடோனிடிஸ் (வயிறு உட்புற அடுக்கின் வீக்கம்)க்கு எதிராக சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா ஒரு சிறந்த ஆண்டிமைக்ரோபியல் முகவாராக செயல்படுகிறது. இருப்பினும், மனித ஆய்வுகள் இல்லாததால், இந்த மூலிகைகளின் ஆண்டிமைக்ரோபியல் தன்மைகளை பற்றி அதிகம் உறுதி செய்ய முடியாது.

காய்ச்சலுக்கு சீந்தில் கொடி - Giloy for fever in Tamil

பாரம்பரிய மருந்துகளில் நாள்பட்ட காய்ச்சலை குனபடுத்த சீந்தில் கொடி பயன்படுத்தபடுகிறது. விலங்குகளில் நடத்திய ஆய்வுகள் சீந்தில் கொடி மூலிகையின் காய்ச்சலை குறைக்கும் தன்மையை குறிக்கின்றன. சில மருத்துவ ஆய்வுகளில் டெங்கு வை குனபடுத்துவதில் அம்ருதவல்லியின் திறனை சோதித்தபோது, உடல் வெப்பம் குறைந்தது காணப்பட்டது. ஆனால் இந்த மூலிகை எவ்வாறு செயல்பட்டு உடல் வெப்பத்தை தனிக்கிரத்து என்று தெரிந்து கொள்ள எந்த வித ஆதாரமும் இல்லை.அதனால் தங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இந்த மூலிகையின் காய்ச்சல் குறைக்கும் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளவும்  

கல்லீரலுக்கு சீந்தில் கொடி - Giloy for liver in Tamil

ஆயுர்வேதத்தில், சீந்தில் கொடி மிக முக்கியமான ஹெபாடடோரோட்டிடிக் மூலிகையாக கருதப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள்  மஞ்சள் காமாலை போன்ற  சூழ்நிலைகளுக்கு சிகிச்சையாக இதை பரிந்துரைக்கின்றனர். சமீபத்திய ஆய்வகம் மற்றும் விலங்கு அடிப்படையிலான சோதனைகளில் அம்ருதவல்லியின் சாற்றை  (இலை, பட்டை, தண்டு) பருகுவது  ஹெபடோப்ரோடேக்டிவ்  செயல்பாட்டை குறிக்கும் என்பதைக் காட்டுகிறது. மேலும் அமினோட்ரன்ஸ்ஃபெரேசஸ், அலனைன் அமினாட்டன்ஸ்ஃபெரேஸ் போன்ற கல்லீரலிலிருந்து வரும் பல்வேறு உயிர்வேதியியல் சுரப்புகளை குறைத்து சூப்பரஆக்சைட் டிச்முடஸ் சை  சீந்தில் கொடி அதிகரித்துள்ளது. மருத்துவர்களை பொறுத்தவரையில் இந்த நொதிகள் சிறிய அளவுகளில் ஆரோக்கியமான கல்லீரலிலிருந்து சுரக்கும், ஆனால் சேதமடைந்தால் அல்லது பாதிக்கப்பட்ட  ல்லீரல், இந்த நொதிகள் மிக அதிக அளவில் சுரக்கும். இதனால் உடலில் கல்லீரல் சார்ந்த நச்சுத்தன்மை உண்டாகிறது. ஆய்வின் படி அம்ருதவல்லியிலுள்ள டினோஸ்போரின் மற்றும் டினோஸ்போனோன் ஆகியவை ஹிபாடிடிஸ் பி மற்றும் ஈ யை எதிர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய மரபு வழிகாட்டலில் பாரம்பரிய இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, அம்ருதவல்லியின் ஹேபப்ரோடேக்டிவ் செயல்திறனை சோதிக்க ஒரு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் படி, 20 ஹெபடைடிஸ் நோயாளிகள் நான்கு வாரங்கள் 4 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு 4 மாத்திரைகள் விதம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக கல்லீரல் சேதம் மற்றும் ஹெபடைடிஸ் அறிகுறிகளில் கணிசமாக குறைந்திருந்தது. எவ்வாறாயினும், கல்லீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் எந்தவொரு வகையிலும் அம்ருதவல்லியை  எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நீங்கள் உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது

மூட்டுவலிக்கு சீந்தில் கொடி - Giloy for arthritis in Tamil

அம்ருதவல்லியை, மூட்டு வீக்கம் மற்றும் எலும்பு சேதத்தை குறைப்பதற்கான சிறந்த முகவர் என்று ப்ரீகிளினிகல் பரிசோதனைகள் கூறுகின்றன. உடலில் வீக்கத்துக்கு காரணமாக இருக்கும் சில சைட்டோகீன்களின் (உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூலம் சுரக்கும் புரதங்கள்) மற்றும் டி-அணுகளின் (உடலின் ஒரு வகையான ஆன்டிபாடி அணுகள்) செயல்பாட்டை முடக்கி உடலில் ஏற்படும் வீக்கத்தை  குறைக்கப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொசியம் மற்றும் மனிதர்களின் மறுசீரமைத்தல் ஆகியவற்றிற்கான உயிரணுக்களைக் கொண்டிருக்கும் எலும்புக்கூடுகளின் செயல்பாட்டை சீந்தில் கொடி குறைப்பதாக குறிப்பிடபட்டுள்ளது. இருப்பினும், இந்த துறையில் மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, மூட்டுவலி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் ஆயுர்வேத டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்  (மேலும் வாசிக்க: மூடுவலியின் வகைகள்)

நீரிழுவு நோய்க்கு சீந்தில் கொடி - Giloy for diabetes in Tamil

பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மருத்துவ அமைப்புகளில் சீந்தில் கொடி ஒரு இரத்தச் சர்க்கரைக் குறைக்கும் (இரத்த சர்க்கரை குறைப்பு) முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. பல விலங்கு மற்றும் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சீந்தில் கொடி யின் நீரிழுவு எதிர்ப்பு தன்மையின் செயல்திறனை சோதித்தன. ஆய்வுகள், சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா இரத்த சக்கரை அளவை குறைப்பதில் மிகவும் திறமையானதாக தெரிவிக்கின்றன. மேலும் இந்த மூலிகை ஹைபோக்லேமிக் நிகழ்வை நடத்தி உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து அக்சிடேடிவ் அழுத்தத்தை குறைப்பதாக குறிப்பிட பட்டுள்ளது. மேலும், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் (குளுக்கோனோஜெனெஸ் மற்றும் கிளைகோஜெனோலிசிஸ்) சில முக்கியமான படிநிலைகளில் அம்ருதவல்லியின் தலையீடு , ஒட்டுமொத்தமாக இரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதற்கு வழிவகுக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (csir) மற்றும் இந்தியாவில் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுமூலிகை (ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகை)  பொருள் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் அம்ருதவல்லியும் ஒரு அங்கமாகும். Csir இன் படி, இந்த மருந்து இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கான ஆயுர்வேத கூட்டுபதார்த்தத்தில் பயன்படுகிறது. இதில் வழக்கமான நீரிழிவு மருந்துகளுடன் வரும் பக்க விளைவுகள் தோன்றுவது இல்லை. எந்த மருந்து அல்லது மூலிகை எடுக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. (மேலும் வாசிக்க: நீரிழிவு சிகிச்சை).

டென்குவிர்க்கு சீந்தில் கொடியின் பயன்கள் - Giloy for Dengue in Tamil

ஆயுர்வேத மருத்துவர்கள் டெங்கு அறிகுறிகளுக்கு சீந்தில் கொடி தண்டு சாற்றை பரிந்துரைக்கின்றனர். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் அப்ளைடு ரிசர்ச்சில் குறிப்பிடப்பட்ட நேர்வாய்வில், டெங்குவால் பாதிக்கபட்ட ஒரு பெண் நோயாளிக்கு ஒரு நாளைக்கு 40 மில்லி கிராம் சாறு என்று 15 நாட்களுக்கு வழங்கப்பட்டது. 15 நாட்களின் முடிவில், காய்ச்சல் மற்றும் தடிப்புக்கள் குறைந்து, பிளேட்லெட் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காட்டப்பட்டது. எந்த ஒரு பக்க விளைவுகளும் காணப்படவில்லை. மற்றொரு ஆய்வில், குறைவான பிளேட்லேட் எண்ணிக்கை கொண்ட 200 பேருக்கு பப்பாளி மற்றும் சீந்தில் கொடி இலையின் கலவை சாற்றை 5 நாட்களுக்கு தினமும் 5 மில்லி விதம் வழங்கப்பட்டது. எல்லா நோயாளிகளுக்கும் இரத்த சிவப்பணுக்களின் என்னக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. எனவே, சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா ஆரம்பகட்ட டெங்கு  சிகிச்சைக்குரிய ஆற்றல் வாய்ந்தது என்று பாதுகாப்பாக கூறலாம்.

நோயெதிர்ப்பை ஊக்குவிக்க சீந்தில் கொடி - Giloy boosts immunity in Tamil

சீந்தில் கொடி மூலிகை அதன் இம்முனோமொடுலேடிங் (நோய்த்தடுப்பு மேம்படுத்தும்) தன்மையினால் பாரம்பரிய மருத்துவ முறையில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள், சீந்தில் கொடியை அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட மூலிகைகளில் முதன்மையாக கருதுகின்றனர். ஒரு சீரற்ற மருத்துவ சோதனையில், எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட 68 நபர்களை, இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு. ஒரு குழுவிற்கு சீந்தில் கொடி கொடுக்கப்பட்டது, மற்றொரு குழு ஆறு மாத காலத்திற்கு பிளாசிபோ (எந்த ஒரு பயனும் அள்ளிக்கத பொருள்) கொடுக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட காலத்தின் முடிவில், சீந்தில் கொடி எடுத்துக் கொண்ட குழுவினர்களில் நோய்க்கான அறிகுறிகள் கணிசமாக குறைந்திருந்தது, மற்றும் முழுமையான ஆரோக்யத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. எதனோபார்மகோலஜி பத்திரிகையின் ஒரு கட்டுரையின் படி, சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா எனபடும் இந்த மூலிகையில் இயற்கையாக உயிர் வேதியியல் பொருட்கள் உள்ளது, அதன் காரணமாக இந்த மூலிகை நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்டுள்ளது. உடலில் உள்ள உயிர் வேதியியல் பாகோடைட்ஸ் (ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்கள்) இதனால் த்ஹோண்டபடுவதன் காரணமாக நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் அமைப்பு இருக்கலாம், என கூடுதல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தோல் காயங்களுக்கு சீந்தில் கொடி - Giloy for skin wounds in Tamil

விலங்குகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா; ஒரு நல்ல காயங்களை குணபடுத்தும் முகவர் என்று அறியவந்துள்ளது. மேலும் அம்ருதவல்லியை காயத்தின் மேல் பூசினால் அது காயத்தை விரைவாக குனபடுத்துவதுடன், காயம் கொண்ட இடத்தில் இணைப்பு திச்சுக்களை திறம்பட வளர செய்கிறது. துரதிஷ்டவசமாக இந்த மூலிகையின் காயத்தை குணபடுத்தும் ஆற்றலை நிரூபிக்க மனிதர்களில் இதுவரை பரிசோதனை செய்யப்படவில்லை.

அம்ருதவல்லியின்  தண்டு அல்லது இலையைக் கரைசலாக (கஷாயம்) எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இது பொதுவாக போடியாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால்; சீந்தில் கொடி மாத்திரைகள், கூட்டு குளிகைகள், மற்றும் சாறு போன்ற பிற பொருட்களாக பயன்படுத்தப்படலாம். இந்த மூலிகையின் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஒரு மூலிகை தேநீராக வாங்கி பருகலாம் 

ஆயுர்வேத மருத்துவர்களின் படி, 1-2 g வரை அம்ருதவல்லியின் தண்டு அல்லது அம்ருதவல்லியின் இல்லை சாற்றை எந்த வித பக்க விளைவுகளின் பயம்மும் இல்லாமல் எடுத்துகொள்ளலாம். இருப்பினும் அம்ருதவல்லியை ஒரு உணவு நிரப்பியாக பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW
  • சீந்தில் கொடி ஒரு திறமையான இரத்தச் சர்க்கரைக் குறைக்கும் முகவராகும் (ஹைபோக்லேமிக்) ஆகும். எனவே நீங்கள் நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், எந்தவொரு வடிவத்திலும் சீந்தில் கொடியை  எடுத்துக்கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவருடன் அணுகி ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது.
  •  கர்ப்ப காலத்தில் அல்லது பாலூட்டலின் போது சீந்தில் கொடியின் நன்மைகள் பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சீந்தில் கொடியை எந்த வடிவத்திலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்
  •  டினோஸ்போரா உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பை மேலும் திறனாக வேலை செய்ய தூண்டுகிறது அதனால் சீந்தில் கொடி ஒரு சிறந்த நோய்த்தடுப்பு மருந்து ஆகும். எனவே, நீங்கள் தற்சார்பு ஏமக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்க்கு சீந்தில் கொடியை எடுத்துகொள்ள கூடாது, அல்லது அதை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுங்கள் .
Dr Bhawna

Dr Bhawna

Ayurveda
5 Years of Experience

Dr. Padam Dixit

Dr. Padam Dixit

Ayurveda
10 Years of Experience

Dr Mir Suhail Bashir

Dr Mir Suhail Bashir

Ayurveda
2 Years of Experience

Dr. Saumya Gupta

Dr. Saumya Gupta

Ayurveda
1 Years of Experience


Medicines / Products that contain Giloy

மேற்கோள்கள்

  1. M.V. Kalikar et al. Immunomodulatory effect of Tinospora cordifolia extract in human immuno-deficiency virus positive patients. Indian J Pharmacol. 2008 Jun; 40(3): 107–110. PMID: 20040936
  2. Sharma U, Bala M, Kumar N, Singh B, Munshi RK, Bhalerao S. Immunomodulatory active compounds from Tinospora cordifolia. J Ethnopharmacol. 2012 Jun 14;141(3):918-26. PMID: 22472109
  3. Soham Saha, Shyamasree Ghosh. Tinospora cordifolia: One plant, many roles. Anc Sci Life. 2012 Apr-Jun; 31(4): 151–159. PMID: 23661861
  4. Sannegowda KM, Venkatesha SH, Moudgil KD. Tinospora cordifolia inhibits autoimmune arthritis by regulating key immune mediators of inflammation and bone damage. Int J Immunopathol Pharmacol. 2015 Dec;28(4):521-31. PMID: 26467057
  5. V. Sharma, D. Pandey. Protective Role of Tinospora cordifolia against Lead-induced Hepatotoxicity. Toxicol Int. 2010 Jan-Jun; 17(1): 12–17. PMID: 21042467
  6. B. T. Kavitha, S. D. Shruthi, S. Padmalatha Rai, Y. L. Ramachandra1. Phytochemical analysis and hepatoprotective properties of Tinospora cordifolia against carbon tetrachloride-induced hepatic damage in rats. J Basic Clin Pharm. June 2011-August 2011; 2(3): 139–142. PMID: 24826014
  7. Hussain L, Akash MS, Ain NU, Rehman K, Ibrahim M. The Analgesic, Anti-Inflammatory and Anti-Pyretic Activities of Tinospora cordifolia. Adv Clin Exp Med. 2015 Nov-Dec;24(6):957-64. PMID: 26771966
  8. B. K. Ashok, B. Ravishankar, P. K. Prajapati, Savitha D. Bhat. Antipyretic activity of Guduchi Ghrita formulations in albino rats. Ayu. 2010 Jul-Sep; 31(3): 367–370. PMID: 22131741
  9. Thatte UM, Kulkarni MR, Dahanukar SA. Immunotherapeutic modification of Escherichia coli peritonitis and bacteremia by Tinospora cordifolia. J Postgrad Med. 1992 Jan-Mar;38(1):13-5. PMID: 1512717
  10. Tiwari M, Dwivedi UN, Kakkar P. Tinospora cordifolia extract modulates COX-2, iNOS, ICAM-1, pro-inflammatory cytokines and redox status in murine model of asthma. J Ethnopharmacol. 2014 Apr 28;153(2):326-37. PMID: 24556222
  11. Badar VA et al. Efficacy of Tinospora cordifolia in allergic rhinitis. J Ethnopharmacol. 2005 Jan 15;96(3):445-9. Epub 2004 Nov 23. PMID: 15619563
  12. Mohanjit Kaur, Amarjeet Singh, Bimlesh Kumar. Comparative antidiarrheal and antiulcer effect of the aqueous and ethanolic stem bark extracts of Tinospora cordifolia in rats. J Adv Pharm Technol Res. 2014 Jul-Sep; 5(3): 122–128. PMID: 25126533
  13. Stanely Mainzen Prince P, Menon VP, Gunasekaran G. Hypolipidaemic action of Tinospora cordifolia roots in alloxan diabetic rats. J Ethnopharmacol. 1999 Jan;64(1):53-7. PMID: 10075122
  14. Gameiro CM, Romão F, Castelo-Branco C. Menopause and aging: changes in the immune system--a review. Maturitas. 2010 Dec;67(4):316-20. PMID: 20813470
  15. Singh N, Singh SM, Shrivastava P. Effect of Tinospora cordifolia on the antitumor activity of tumor-associated macrophages-derived dendritic cells. Immunopharmacol Immunotoxicol. 2005;27(1):1-14. PMID: 15803856
Read on app